Posts

45. எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

  45. எம்மனோரில் செம்மலும் உடைத்தே!   பாடியவர்: உலோச்சனார், ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை இப்பாடலை உலோச்சனார் பாடியதாகச் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். சில பதிப்புகளில் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   திணை: நெய்தல் துறை: குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது துறை விளக்கம்: த லைவியைச் சந்திக்க உதவி கேட்டு வரும் தலைவனை உடனடியாகச் சந்திக்க விடாமல் தோழி தடுத்துத் தள்ளிப்போடுகிறாள்.     பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைக் கூடி மகிழ விரும்பி (குறை நயந்து) வருகின்றான். "நாங்கள் மீன் பிடிக்கும் எளிய குடிசை வாழ் மக்கள்; நீயோ தேர் ஊர்ந்து வரும் செல்வந்தன். நம் இருவருக்கும் இடையே குலத்தாலும் வளத்தாலும் பெரிய வேறுபாடு உள்ளது" என்று கூறித் தோழி தலைவனைத் தூர விலகி நிற்குமாறு கூறுகிறாள்.   இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு மீன் எறி பரதவர் மகளே நீயே நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே           ...

44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது

  44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது   பாடியவர்: பெருங்கௌசிகனார் இவர் நற்றிணையில் இரண்டு செய்யுட்கள் (44, 139) இயற்றியுள்ளார். இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் பத்துப்பாட்டில் உள்ள மலைபடுகடாம் என்ற பாடலை இயற்றியுள்ளார். நற்றிணைப் பாடல்களை இயற்றிய பெருங்கௌசிகனாரும், மலைபடுகடாம் இயற்றிய இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனாரும் ஒருவரே எனச் சிலர் கருதுகின்றனர். திணை: குறிஞ்சி துறை: இற்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது துறை விளக்கம்:   தலைவியின் களவுறவு தெரிந்ததால் அவளை வீட்டில் அடைத்து வைத்த பிறகு, மறுநாள் வழக்கமான சந்திப்பு இடத்திற்கு வந்த தலைவன் அவளைக் காணாமல் தன் நெஞ்சிடம் பேசுகிறான். பாடலின் பின்னணி: களவொழுக்கத்தில் தலைவியோடு காதல் கொண்ட தலைவன், அவளை வழக்கமாகத் தினைப்புனத்தில் சந்தித்தான். களவொழுக்கம் வெளிப்பட்டதால் தலைவி இற்செறிக்கப்பட்டிருந்தாள் . தினை விளைந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்ததால், தினைப்புனத்தில் அவளைச் சந்திக்கும் வழக்கமான வாய்ப்பு இனி இல்லாமல் போகிறது.   இற்செறிப்புக்கு மறுநாள் தலைவன்...

43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது

  43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது     பாடியவர்: எயினந்தையார் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இவர்   எயினனுக்குத் தந்தை என்பதால் எயினந்தையார் என்று அழைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர்.   திணை: பாலை   துறை: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது   துறை விளக்கம்: தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் என்பதை அறிந்த தோழி, அவன் செல்லாமல் தடுத்து நிறுத்தியது அல்லது அவன் பயணத்தை ஒத்திவைக்கச் செய்தது .   பாடலின் பின்னணி: பாலை நிலத்து வெயிலில் தவித்துப் பசியால் அலைந்த செந்நாய், ஒரு மானைக் கொன்று தின்றபின் எஞ்சிய இறைச்சியே வழிப்போக்கர்களுக்கு உணவாகும் அளவுக்கு வறட்சியும் ஆபத்தும் நிறைந்த கொடிய பாலைவழியில், தலைவன் பொருள் ஈட்டப் பிரிய எண்ணுகிறான். அதனைத் தோழியிடம் அறிவிக்க, அவளோ தலைவனின் பிரிவுச் செய்தியைக் கேட்டதுமே தலைவி அடைந்த துயரத்தை எடுத்துரைக்கிறாள். பகைவேந்தனின் யானைப் படை மதிலைச் சூழ்ந்து நின்றபோது, அதைக் காக்க எவரும் இன்றி, அஞ்சற்க என்று அபயம் அளித்த துணை மன்னனும் தன்னைக...

42. பாக, மறத்தற்கு அரிது!

  42. பாக, மறத்தற்கு அரிது!   பாடியவர்: கீரத்தனார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-ன் உரையில் காணலாம். திணை: முல்லை   துறை: வினை முற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது துறை விளக்கம்: தன் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் தலைவன், தேரோட்டியிடம் கூறியது. பாடலின் பின்னணி: போரில் வென்று தன் கடமையை முடித்த கையோடு, கார்காலத்து மேகங்கள் சூழ்ந்த மாலையில் தலைவன் தன் தேரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தான். வழியெல்லாம் பெய்த பெருமழையால் பள்ளங்களில் நீர் நிரம்பி வழிய, தவளைகளின் பேராரவாரம் தேர்மணிகளின் ஓசையை அறவே மறைத்துவிட்டது. தன்னைப் பிரிந்த துயரால் கூந்தலைக் கூடச் செப்பனிடாமல் வாடிக்கொண்டிருக்கும் தலைவிக்கு, இந்த ஆரவாரத்தில் தன் வருகை தெரியாமல் போய்விடுமே என்று தலைவன் நினைத்தான். உடனே தன் ஏவலர்களை முன்கூட்டியே வீட்டிற்கு விரைந்து சென்று, தான் வரும் செய்தியைச் சொல்லுமாறு கூறினான். செய்தி கேட்டுப் பரவசமடைந்த தலைவி, அவசர அவசரமாகத் தன் கூந்தலை நீராட்டிக் கழுவி, சில மலர்களை மட்டுமே சூடி ஆயத்தமானாள். சரியாக அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த தலைவனைக் கண்டதும், பி...

41. அரிவையின் குறுநடைக் கூட்டம்

  41. அரிவையின் குறுநடைக் கூட்டம்   பாடியவர்: இளந்தேவனார் இளந்தேவனார் என்பவர் நற்றிணையில் ஒரு பாடலும் (41) மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்ற புலவர் அகநனூற்றில் மூன்று பாடல்களும் (58, 298, 328) இயற்றியதாகக் காணப்படுகிறது. இருவரும் ஒரு காலத்தில் வாழ்ந்ததால், ஒருவர் ‘இளந்தேவனார்’ என்றும் மற்றொருவர் ‘மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ஆகியோர்   'இளந்தேவனார்' என்பவரும் 'மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்' என்பவரும் ஒருவரே என்று கூறுகின்றனர்.   திணை: பாலை   துறை: பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது   துறை விளக்கம்: "ஆண்கள் தங்கள் கடமைக்காகவும் பொருள் ஈட்டுவதற்காகவும் பிரிந்து செல்வது உலக வழக்கம்; அவர் விரைவில் கடமையை முடித்து திரும்பி வந்துவிடுவார்" என்று உலக இயல்பை எடுத்துக்கூறி, தலைவியின் மனதைத் தேற்றுவதற்காகத் தோழி ஆறுதல் கூறுகிற...