42. பாக, மறத்தற்கு அரிது!
42. பாக, மறத்தற்கு அரிது! பாடியவர்: கீரத்தனார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-ன் உரையில் காணலாம். திணை: முல்லை துறை: வினை முற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது துறை விளக்கம்: தன் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் தலைவன், தேரோட்டியிடம் கூறியது. பாடலின் பின்னணி: போரில் வென்று தன் கடமையை முடித்த கையோடு, கார்காலத்து மேகங்கள் சூழ்ந்த மாலையில் தலைவன் தன் தேரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தான். வழியெல்லாம் பெய்த பெருமழையால் பள்ளங்களில் நீர் நிரம்பி வழிய, தவளைகளின் பேராரவாரம் தேர்மணிகளின் ஓசையை அறவே மறைத்துவிட்டது. தன்னைப் பிரிந்த துயரால் கூந்தலைக் கூடச் செப்பனிடாமல் வாடிக்கொண்டிருக்கும் தலைவிக்கு, இந்த ஆரவாரத்தில் தன் வருகை தெரியாமல் போய்விடுமே என்று தலைவன் நினைத்தான். உடனே தன் ஏவலர்களை முன்கூட்டியே வீட்டிற்கு விரைந்து சென்று, தான் வரும் செய்தியைச் சொல்லுமாறு கூறினான். செய்தி கேட்டுப் பரவசமடைந்த தலைவி, அவசர அவசரமாகத் தன் கூந்தலை நீராட்டிக் கழுவி, சில மலர்களை மட்டுமே சூடி ஆயத்தமானாள். சரியாக அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த தலைவனைக் கண்டதும், பி...