Posts

Showing posts from September, 2026

50. நாண் இலை எலுவ!

  50. நாண் இலை எலுவ!   பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுங்கோ இவர்‌ சேரர்‌. இவர் பாலைபாடிய பெருங்‌ கடுங்கோவின்‌ தம்பியாகக் கருதப்படுகிறார். மருதத்‌ திணையைச்‌ சிறப்பித்துப்‌ பாடியதால் இவ‌ர் மருதம் பாடிய என்ற அடைமொழியைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக நற்றிணையில் ஒரு செய்யுளும் (50), அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (96, 176) உள்ளன.   திணை: மருதம் துறை: தோழி பாணற்கு வாயில் மறுத்தது துறை விளக்கம்: தலைவன் பரத்தையரிடம் (வேறு பெண்களிடம்) சென்று வந்ததால் கோபமுற்றிருக்கும் தலைவியின் ஊடலைத் தணிக்க, பாணன் தலைவனின் தூதனாக வருகிறான். ஆனால், பாணர்களின் கெஞ்சுதலையோ சமரசப் பேச்சையோ ஏற்க மறுத்து, தலைவனின் தவறைக் சுட்டிக்காட்டி, அவர்களைத் தோழி மனைக்குள் (வீட்டுக்குள்) நுழைய விடாமல் வாயிலிலேயே மறுத்துத் திருப்பி அனுப்புவதே "தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது" என்னும் துறையாகும். பாடலின் பின்னணி: தலைவன் பரத்தையருடன் தொடர்பு கொண்டதால் தலைவி அவன்மீது ஊடல் கொண்டிருக்கிறாள். தலைவன் தனது பக்கம் இருந்து சமாதானம் செய்யப் பாணனைத் தூதாக அனுப்புகிறான். பாணன் வந்து தலைவியைச் சந்த...

49. அறியின் எவனோ, தோழி?

  49. அறியின் எவனோ, தோழி?   பாடியவர்: நெய்தல் தத்தனார் தத்தன் என்பது இவர் இயற்பெயர். கொடியூர்கிழாரின் மகனார். நெய்தல் திணையைச் சிறப்பாகப் பாடியதனால் ‘நெய்தல் தத்தனார்’ என அழைக்கப்பட்டார். நற்றிணை 49, 130 ஆகிய இரண்டு பாடல்களும் அகநானூறு 243-ஆம் பாடலும் இவரால் பாடப்பட்டவை .   திணை: நெய்தல் துறை: தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம் துறை விளக்கம்: தலைவன் சிறைப்புறமாக இருந்து தோழியின் பேச்சைக் கேட்கிறான்; தலைவியின் ஆற்றாமையை வியப்பதுபோலத் தோழி கூறி, தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளுமாறு தூண்டுகிறாள்.   பாடலின் பின்னணி: கடற்கரைச் சிற்றூரில் பகல் முழுவதும் பரதவர்கள் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மாலைப் பொழுது நெருங்கியதும், வலையில் சிக்கிய இறால்களையும் பிடித்த மீன்களையும் எடுத்துக்கொண்டு அவர்கள் கரைக்குத் திரும்பினர். கடற்பறவைகளும் இரை தேடுவதை நிறுத்தி அமைதியடைந்தன. வெண்மையான மணல் மேடுகளைக் கடந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியது. புன்னை மரத்தின் மணமும் தாழை மலரின் நறுமணமும் காற்றில் கலந்தன. அந்த...

48. எம் கண் உளபோலச் சுழலும்

  48. எம் கண் உளபோலச் சுழலும்   பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ திணை: பாலை துறை: பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது துறை விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரியப்போகும் எண்ணத்தை உணர்த்தியபோது, அதனை அறிந்த தோழி சொல்லியது. பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். அவனுடைய பிரிவைத் தோழி உணர்கிறாள். அவன் செல்லும் வழி கொடிய பாலைநில வழியாகும். அங்கு மறவர்கள் வழிப்போக்கர்களைக் குறிவைத்து அம்புகளை எய்யத் தயாராக உள்ளனர். எனவே, தலைவன் அந்த ஆபத்தான காட்டைக் கடந்து செல்லாமல், தங்களிடையே தங்க வேண்டும் என்று தோழி அறிவுறுத்துகிறாள்.   அன்றை அனைய ஆகி இன்றும் எம் கண் உள போலச் சுழலும் மாதோ புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றி புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை            5 கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமர் இடை உறுதர நீக்கி நீர் எமர் இடை உறுதர ஒளித்த காடே   அருஞ்சொற்பொருள்: 1. அன்றை அனைய – அன்றைய நாளைப...

47. கூறின் எவனோ தோழி!

  47. கூறின் எவனோ தோழி!   பாடியவர்: நல்வெள்ளியார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 7-ன் உரையில் காணலாம்.   திணை: குறிஞ்சி   துறை: சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது   துறை விளக்கம்: தலைவன் சிறைப்புறத்தானாக இருந்து கேட்கும் நிலையில், தோழி தலைவியிடம் பேசுவதுபோலத் தலைவனுக்கும் தன் கருத்து விளங்கும்படி கூறுகிறாள்.   பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்ததால் தலைவி பசலை கொண்டு வாடுகிறாள். அவளது மெய்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவனின் பிரிவே என்பதை அறியாத அன்னை, இதனைத் தெய்வத்தால் ஏற்பட்ட நோய் என்று கருதி, கழங்கு பார்த்து வெறியாட்டு நடத்த எண்ணுகிறாள். இந்நிலையில் தலைவன் சிறைப்புறத்தானாக இருந்து கேட்கும்படி தோழி தலைவியிடம் பேசுகிறாள். புலியால் ஆண் யானை கொல்லப்பட்டதால் துயருற்ற பெண் யானை தன் கன்றைத் தழுவிக்கொண்டு வருந்தி நிற்பதை எடுத்துக்காட்டி, தலைவியின் பசலைக்கும் தலைவனின் பிரிவே காரணம் என்பதை அவனுக்கு உணர்த்துகிறாள். மேலும், அன்னை செய்யும் வெறியாட்டு இப்பசலைக்குத் தீர்வாகாது என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.   பெருங் களிறு...

46. இன்பமும் இளமையும் எய்கணை நிழல்

  46. இன்பமும் இளமையும் எய்கணை நிழல்   பாடியவர்: கோட்டம்பலவனார் , ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை இப்பாடலை கோட்டம்பலவனார் பாடியதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். சில பதிப்புகளில் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   திணை: பாலை   துறை: பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது துறை விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லப் போவதாகக் கூறியபோது, அந்தப் பிரிவால் தலைவி அடையும் துன்பத்தை எடுத்துக்கூறி, தலைவன் பிரிந்து செல்லாமல் இருக்குமாறு தோழி கூறியது.   பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். தன் பிரிவைத் தலைவியிடம் நேரடியாகக் கூறினால் அவள் பெரிதும் வருந்துவாள் என்று கருதி, தோழியிடம் தன் எண்ணத்தைத் தெரிவிக்கிறான். அதைக் கேட்ட தோழி, தலைவனிடம் அறிவுறுத்துகிறாள். “உலக வாழ்க்கையில் இளமையும் காதல் இன்பமும் மிக விரைவாகக் கழிந்துவிடுகின்றன. அவ்வாறிருக்க, நிலையற்ற பொருளைத் தேடுவதற்காக நீ தலைவியைப் பிரிந்து, கொடிய பாலை வழியைக் கடந்து செல்வது முறையன்று. ஆகவே, என் தோழ...