Posts

Showing posts with the label 22. நாடன் வந்தனன்!

22. நாடன் வந்தனன்!

  22. நாடன் வந்தனன்!   பாடியவர்: தெரியவில்லை [1] திணை: குறிஞ்சி துறை: வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது துறை விளக்கம்: விரைவில் தலைவனுடன் தலைவிக்கு நிகழவிருக்கும்   திருமணத்தைப் பற்றிய செய்தியைத் தோழி தலைவியிடம் கூறியது.   பாடலின் பின்னணி: ஒரு குறிஞ்சி நிலப்பகுதியில் அறுவடைக்குத் தயாராக நின்ற தினைப்புனத்தைக் காக்கும் பொறுப்பில் தலைவியும் அவளது தோழியும் இருந்தனர். பசுமை போர்த்திய மலைச்சரிவுகளில் காற்று மெதுவாக வீசியது. அப்போது ஒரு பெரிய பெண் குரங்கு, தன் துணையுடன் உயர்ந்த பாறைகளில் ஏறி, முற்றிப் பழுத்த தினைக் கதிர்களை இரு கைகளும் நிறையும் அளவுக்குப் பறித்து, அவற்றைத் தனது கன்னங்களில் அடைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஓடியது. அந்தக் காட்சியைக் கண்ட தலைவி, தன் காதலனுடன் கழித்த இனிய நாட்களை நினைத்து மனம் நெகிழ்ந்தாள். பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவன் எப்போது திரும்புவான் என்ற ஏக்கம் அவள் உள்ளத்தை நாளுக்கு நாள் வாட்டியது. வறட்சியால் வாடும் நிலம்போல் அவளது முகமும் பசலையால் நிறம் இழந்தது; அவள் கண்களில் இருந்த ஒளியும் மங்கியது. ஒருநாள், தலைவனும் ச...