Posts

Showing posts with the label 25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

  25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!   பாடியவர்: பேரிசாத்தனார் இவர் வட வண்ணக்கண் பேரிசாத்தனார் என்றும் குறிக்கப்படுகின்றார்.      பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள்.   இவரது இயற்பெயர் சாத்தனார்.   இவர் ,   ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார்.   தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கர் என்பது தொழிற்பெயர்.   மற்றும் ,   இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வட என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.   இவர் வடம வண்ணக்கர் என்றும் குறிக்கப்படுகின்றார். இவர் புறநானூற்றில் இயற்றிய ஒரு செய்யுள்   (198)   மட்டுமல்லாமல் அகநானூற்றில்   5   செய்யுட்களையும் ( 38, 214, 242, 268, 305),   நற்றிணையில்   8   செய்யுட்களையும் ( 25, 37, 67, 104, 199, 299, 323, 378),   குறுந்தொகையில்   5   செய்யுட்களையும் ( 81, 159, 278, 314, 366)   இயற்றியுள்ளா ர்.   திணை: குறிஞ்சி  ...