Posts

Showing posts with the label 39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!

39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!

  39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!   பாடியவர்: மருதன் இளநாகனார் இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் மருதத்திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தையின் பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.       திணை: குறிஞ்சி துறை: இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது. துறை விளக்கம்: தலைவனும் தலைவியும் முதன்முதலில் சந்தித்துக் கூடிய பின்னர் (இயற்கைப் புணர்ச்சி), மீண்டும் அதே இடத்தில் சந்திக்கின்றனர் (இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சி / இடந்தலைப்பாடு). அப்போது நாணத்தால் தலைகுனிந்து நிற்கும் தலைவியைப் பார்த்து, அவளது பேரழகையும் தன் காமத்தின் மிகுதியையும் புலப்படுத்தித் தலைவன் கூறிய...